உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ ரேஸ் இருவருக்கு காப்பு

ஆட்டோ ரேஸ் இருவருக்கு காப்பு

மதுரவாயல்: தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், ஆட்டோ ரேஸில் ஈடுபட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் -- மதுரவாயல் பைபாஸ் சாலையில், போரூர் சுங்கச்சாவடி அருகே, கடந்த வாரம் சிலர் ஆட்டோ ரேஸில் ஈடுபட்டனர். இது குறித்து, ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்தனர். இதில், 'வாட்ஸாப்' குழு மூலம் ஆட்களை திரட்டி ரேஸ் நடத்தியது தெரியவந்தது. ரேசில் ஈடுபட்ட பெசன்ட் நகரைச் சேர்ந்த சங்கர், 38, அம்பத்துாரைச் சேர்ந்த செந்துார்பாண்டி, 30, ஆகியோரை, போலீசார் நேற்று கைது செய்தனர். மூன்று ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை