மேலும் செய்திகள்
தட்சிண கன்னடாவின் தலைசிறந்த கடற்கரைகள்
04-Sep-2025
கடற்கரையில் குளிப்பதை தடை செய்ய வலியுறுத்தல்
18-Aug-2025
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில், மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கடற்கரை சாலை மணல் பரப்பில், வாகனங்கள் செல்லாத வகையில், தடுப்புகளை மாநகராட்சி அமைத்து வருகிறது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையின் பெரும்பாலான இடங்களில், கடல் மணல் பகுதிக்கு செல்வதற்கு பாதை அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாறான இடங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டாலும், இரவு நேரங்களில் பலர் கடல் மணல் பகுதிக்கு, இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்கின்றனர். அவர்களில் சிலர் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதாகவும் புகார்கள் உள்ளன. இதைத்தொடர்ந்து மாநகராட்சி சார்பில், பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டல அளவில், தடுப்புகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இரண்டு மண்டல எல்லைக்குள் உள்ள, 31 கடற்கரை பகுதி பாதைகளில், வாகனங்கள் செல்வதை தடுத்து, நிரந்தர தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: சென்னை கடற்கரை மணற்பரப்புகளில் வாகனங்கள் நுழைவதை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெருங்குடி, சோழிங்கநல்லுார் மண்டலங்களில், கொட்டிவாக்கம், பாலவாக்கம், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கம் ஆகிய இடங்களில் வாகனங்கள் உள்ளே நுழையக்கூடிய, 31 இடங்களில் வாகன தடுப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இப்பணிகள் ஓரிரு நாட்களில் முடிவுக்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
04-Sep-2025
18-Aug-2025