உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூவம் பாலத்தில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்

கூவம் பாலத்தில் நிறுத்தும் வாகனங்களால் நெரிசல்

சூளைமேடு,சூளைமேடு சிக்னலில் இருந்து, ஹாரிங்டன் சாலையை நோக்கி செல்லும் வழியில், சூளைமேடு நமச்சிவாயபுரத்தில் கூவத்தின் மேல் இணைப்பு பாலம் உள்ளது.இந்த பாலத்தின் இருபுறங்களிலும், அப்பகுதிகளில் வசிப்போர், ஆட்டோ மற்றும் கனரக வானங்களை, 'பார்கிங்' போல் அத்துமீறி நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், அவ்வழியாக செல்லும்வாகன ஒட்டிகள், விபத்தில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:இணைப்பு பாலத்தில், பல ஆண்டுகளாகவே அத்துமீறி வாகனங்களை நிறுத்திச் செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.அதுமட்டுமின்றி, இரவு நேரங்கில் சிலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவ்வழியாக செல்வோர், வாகன ஓரங்களில் சிறுநீர் கழிப்பதால் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. சூளைமேடு சிக்னல் அருகில் உள்ள போலீசாரும், ஆக்கிரமிப்பாளர்களுக்கு உடந்தையாக இருக்கின்றனர்.எனவே, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள், பாலத்தில் ஆக்கிரமித்து வாகனங்களை நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை