உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மழைநீரில் மூழ்கிய சுடுகாடு

 மழைநீரில் மூழ்கிய சுடுகாடு

வண்ணாரப்பேட்டை: மூலக்கொத்தளம் சுடுகாட்டில் மழைநீர் தேங்கியதால், இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல், அப்பகுதி மக்கள் தவிக்கின்றனர். வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளத்தில், 24 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு உள்ளது. இது, 300 ஆண்டுகள் பழமையானது. தொடர் மழையால் மூலக்கொத்தளம் சுடுகாடு குளம்போல் காட்சியளிக்கிறது. இதனால், இறந்தவர்களின் உடல்களை புதைக்க முடியாமல், உறவினர்கள் திணறி வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ