மேலும் செய்திகள்
மத்திய அரசு அலுவலக அணி காவல் ஹேக்கத்தானில் வெற்றி
7 hour(s) ago
போதைக்கு எதிராக மாணவியர் விழிப்புணர்வு
7 hour(s) ago
ஜதியில் ஜொலித்த சஹானா
8 hour(s) ago
நாசாவின் சர்வதேச போட்டியில் ஈஸ்வரி கல்லுாரி சாதனை
8 hour(s) ago
புழுதிவாக்கம்,சென்னை மாநகராட்சி, வார்டு 186க்கு உட்பட்டது புழுதிவாக்கம். இங்கு பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள ஜி.கே.அவென்யூ, டி.ஆர்.பாலு தெரு, மந்தைவெளி தெரு மற்றும் கணேஷ் நகர் உள்ளிட்ட பல தெருக்களில், மழைநீர் வடிகால் பணி இன்னும் துவங்கவில்லை.இங்குள்ள பெரும்பாலான தெருக்களில் 20 ஆண்டுகளுக்கு முன், 1.5 அடி அகலத்தில் கட்டப்பட்ட பழைய மழைநீர் வடிகால்களே தற்போதும் பயன்பாட்டில் உள்ளன.போதிய பராமரிப்பின்றி, சேதமடைந்த நிலையில் உள்ள இந்த வடிகால்களை அகற்றி, புதிய மழைநீர் வடிகால்கள் அமைக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை எழுப்பி உள்ளனர்.அவர்கள் கூறியதாவது:மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள், கிடப்பில் போடப்பட்டதாலேயே, புழுதிவாக்கத்தின் பல தெருக்கள், 'மிக்ஜாம்' புயல் வெள்ளத்தில் மூழ்கின.மந்தைவெளி தெருவிலிருந்து வரும் மழைநீர், ஜி.கே.அவென்யூ, டி.ஆர்.பாலு தெருவில் உள்ள 1.5 அடி அகலம் உடைய, பழைய மழைநீர் வடிகால் வழியாக, பாலாஜி நகர் விரிவு, வில்லேஜ் சாலையில் உள்ள வடிகாலை அடைகிறது. பின் பாலாஜி நகர் விரிவு, 24 தெரு வழியாக வீராங்கல் ஓடையில் கலக்கிறது.மேற்கண்ட தெருவில் உள்ள பழைய வடிகால் அனைத்தையும் அகற்றி, புதிதாக அமைக்க வேண்டும். தவிர, கணேஷ் நகரில் உள்ள பழைய வடிகால் அனைத்தும் திறந்த நிலையில், தாழ்வானதாகவும், சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன. இவை, மழைநீரை வெளியேற்றும் திறனை இழந்துவிட்டன.குறிப்பாக, கணேஷ் நகர் 3வது தெரு முதல் 8வது தெரு வரை, தற்போதைய வடிவமைப்புக்கு ஏற்ப, புதிய மழைநீர் வடிகால் அமைத்தால் மட்டுமே, மழைக்காலத்தில் இத்தெருக்களில் தண்ணீர் தேங்காது.புழுதிவாக்கத்தின் 80க்கும் மேற்பட்ட தெருக்களில், இன்னும் துவங்கப்படாமல் உள்ள மழைநீர் வடிகால் பணிகளை உடனே துவங்க, சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
7 hour(s) ago
7 hour(s) ago
8 hour(s) ago
8 hour(s) ago