இ - சேவை மையம் முடக்கம் சான்று பெற முடியாமல் சிக்கல்
புழல், புழல், விநாயகபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்தோர் ஜாதி, வருமானம் உள்ளிட்ட சான்றுகளுக்கு விண்ணப்பிக்க, புழலில் உள்ள இ - சேவை மையத்திற்கு செல்கின்றனர்.அங்கு, 'ஸ்கேனர்' சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி, அவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.இதனால் பயனாளிகள், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை உள்ளது. அங்கும் 'சர்வர்' சரியாக வேலை செய்யவில்லை எனக்கூறி, புழல் இ - சேவை மையத்திற்கு திருப்பி அனுப்புகின்றனர்.புதிய பள்ளி கல்வியாண்டு துவங்க உள்ளது. மாணவர் சேர்க்கை, கல்வி உதவித்தொகை உள்ளிட்டவற்றுக்கு ஜாதி உள்ளிட்ட சான்றிதழ்கள் அத்தியாவசியம். அதற்காக, மாணவர்கள், பெற்றோர், இ - சேவை மையங்களை நாடுவர்.தேவை அதிகமாக உள்ள இந்த நேரத்தில், புழல், மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வர் பழுது என கூறாமல், சேவையை சீராக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.