மேலும் செய்திகள்
ஒரு போன் போதுமே /
27-May-2025
அண்ணா நகர்:அண்ணா நகர் பிரதான சாலைகளில், இரவு நேரங்களில் கூட்டம் கூட்டமாக சாலையை வழிமறித்து திரியும் எருமை மாடுகளால் விபத்து அச்சம் ஏற்பட்டுள்ளது.சாலையில் சுற்றித் திரியும் மாடுகள் விபத்துகளையும், போக்குவரத்துக்கு இடையூறுகளையும் ஏற்படுத்துகின்றன. இதை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்தும், மாடுகள் சாலையில் திரிவதை தடுக்க முடியவில்லை.குறிப்பாக, அண்ணா நகர், 2வது அவென்யூவில் இரவு போக்குவரத்து நிறைந்த பகுதிகளில் எருமை மாடுகள் கூட்டம்கூட்டமாக, எந்நேரமும்சுற்றித் திரிகின்றன. சிலநேரங்களில், மாடுகள் மிரண்டு ஓடுவதால் விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.சிக்னல் பகுதிகளில், சாலையின் நடுவே மாடுகள் நிற்பதால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.இதுகுறித்த, புகார்கள் எழுந்தும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். விபத்து உயிர்பலி சம்பவங்கள் ஏற்படும் முன், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
27-May-2025