மேலும் செய்திகள்
கஞ்சா பறிமுதல்
23-Jun-2025
வேளச்சேரி, பள்ளிக்கரணை, காமராஜர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 26. இவர், 2022ம் ஆண்டு கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த இவர், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தார். வேளச்சேரி போலீசார் இவரை தேடி வந்தனர்.இந்நிலையில், வேளச்சேரி, தரமணி சுற்றுவட்டாரப் பகுதியில், மீண்டும் கஞ்சா வியாபாரம் நடப்பதாக, போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்படி, அப்பகுதியில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.அப்போது, நேற்று அப்பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ராஜேஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து, 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
23-Jun-2025