உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாலையோரம் குப்பை குவிப்பு நியூ ஆவடி சாலையில் சீர்கேடு

சாலையோரம் குப்பை குவிப்பு நியூ ஆவடி சாலையில் சீர்கேடு

அண்ணா நகர், அயனாவரம் பகுதிக்கு உட்பட நியூ ஆவடி சாலையோரத்தில், அத்துமீறி கொட்டப்படும் குப்பையால் சீர்கேடு நிலவுகிறது.அண்ணா நகர் மண்டலம், 95வது வார்டில் வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலை உள்ளது. இதில், பாடியை நோக்கிச் செல்லும் பாதையின் சாலையோரம் ஐ.சி.எப்., ரயில்வேக்கு சொந்தமான நிலங்களும், வில்லிவாக்கம் - அண்ணா நகரை நோக்கிச் செல்லும் சாலையோரம், குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான இடங்களும் உள்ளன.இந்த இருபுறங்களில் உள்ள சாலையோரங்கள் பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், சாலை சுருங்கியதுடன், எப்போதும் போக்குவரத்து நெரிசல் தொடர்கிறது.இதில், அண்ணா நகரை நோக்கி செல்லும் பாதையில், அயனாவரம் சக்கரவர்த்தி நகர் அருகில் உள்ள குடிநீர் வாரியத்திற்குச் சொந்தமான இடத்தில், சாலையோரத்தில் சிலர் அத்துமீறி குப்பையை கொட்டி வருகின்றனர். இதனால், சாலை முழுதும் சுகாதார சீர்கேடு நிலவுகிறது.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, குப்பையை அகற்றி, குடிநீர் வாரிய இடத்தில் தடுப்பு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி