உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ரயில்கள் பிச்சையெடுப்பு சிறுவர்கள் அதிகரிப்பு

 ரயில்கள் பிச்சையெடுப்பு சிறுவர்கள் அதிகரிப்பு

தாம்பரம் ரயில் நிலையத்தை, நாள்தோறும் இரண்டு லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர். பொதுமக்களின் வசதிக்காக, 1 முதல் நான்கு நடைமேடைகளில் தினசரி தாம்பரம் - கடற்கரை இடையே 226, தாம்பரம் - செங்கல்பட்டு இடையே 100 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த மின்சார ரயில்களில், சிறுவர்கள் பிச்சை எடுப்பது அதிகரித்துள்ளது. கூட்டமாக இருக்கும் ரயில்களில், பெற்றோருடன் ஏறும் சிறுவர் - சிறுமியர், கூட்டத்திற்கு மத்தியில் வித்தை காட்டி பிச்சை கேட்கின்றனர். இது, பயணியருக்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது. எனவே, மின்சார ரயில்களில் இதுபோல் பிச்சை எடுக்கும் சிறுவர்களை கண்டறிந்து, அவர்களின் பெற்றோருக்கு கவுன்சிலிங் கொடுத்து, அச்சிறுவர்களை படிக்க வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்