லாரி மோதி ஐ.டி., ஊழியர் உயிரிழப்பு
செம்மஞ்சேரி: நாவலுாரை சேர்ந்தவர் விக்னேஷ், 23. ஐ.டி., ஊழியர். நேற்று மாலை, சோழிங்கநல்லுாரில் இருந்து நாவலுார் நோக்கி, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். ஆவின் பேருந்து நிலையம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த கழிவுநீர் லாரி மோதி துாக்கி வீசப்பட்ட விக்னேஷ், சம்பவ இடத்திலேயே பலியானார். பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், விக்னேஷ் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி, விபத்தை ஏற்படுத்தி தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடுகின்றனர்.