உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் இருந்து தவறி விழுந்து காஞ்சி மாணவர் உயிரிழப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து காஞ்சி மாணவர் உயிரிழப்பு

தாம்பரம் காஞ்சிபுரம் அடுத்த ஆர்ப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்வா, 20. இவர், மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., கிரிமினாலஜி மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.இவர், நேற்று காலை திருமால்பூர் - சென்னை கடற்கரை நிலையம் இடையே சென்ற புறநகர் விரைவு ரயிலில், கல்லுாரிக்கு சென்றார்.ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால், படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பெருங்களத்துார் - தாம்பரம் இடையே ரயில் வந்தபோது, ரயிலில் இருந்து தவறி விழுந்த விஷ்வா, தலையில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இச்சம்பவம் குறித்து, தாம்பரம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை