உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தேசிய குத்துச்சண்டை: திருவொற்றியூர் மாணவர்கள் அசத்தல்

தேசிய குத்துச்சண்டை: திருவொற்றியூர் மாணவர்கள் அசத்தல்

திருவொற்றியூர், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ - மாணவியர் இடையே, நடந்த தேசிய அளவிலான குத்துச்சண்டை போட்டியில், திருவொற்றியூரை சேர்ந்த மூன்று மாணவர்கள், வெண்கல பதக்கம் வென்று அசத்தினர். மாநில அளவில், சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவ - மாணவியர் இடையேயான குத்துச்சண்டை போட்டிகள், ஜூலை 24 - 27ம் தேதிகளில், செங்கல்பட்டு ஸ்ரீ கோகுலம் பப்ளிக் பள்ளியில் நடந்தன. இதில், 19 வயதுக்குட் பட்ட, 46 - 48 கிலோ எடை பிரிவினருக்கான குத்துச்சண்டை போட்டியில், திருவொற்றியூர் வேலம்மாள் நியூ ஜென் பள்ளியின், பிளஸ் 2 மாணவர் என்.யுவராஜ், வெள்ளிப்பதக்கம் வென்றார். அதேபோல், 17 வயதுக்குட்பட்ட, 52 - 54 கிலோ எடை பிரிவினருக்கான குத்துச் சண்டை போட்டியில், திருத்தங்கல் நாடார் பள்ளி, பிளஸ் 1 மாணவர் பி.பூபேஷ், தங்கம் வென்றார். இதில், 46 - 48 கிலோ எடை பிரிவில், அதே பள்ளியைச் சேர்ந்த எம்.ஜோகேஸ்வர் தங்கம் வென்றார். வெள்ளி, தங்கம் வென்றவர்கள், தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். அதன்படி, மூவரும், செப்., 11 - 15 வரை, ஹரியானாவில் நடந்த தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றனர். இதில், 18 மாநிலங்கள், ஆறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற நிலையில், திருவொற்றியூரைச் சேர்ந்த யுவராஜ், பூபேஷ், ஜோகேஸ்வர் ஆகிய மூவரும், அவர்களுக்குரிய பிரிவுகளில் வெண்கலம் வென்று அசத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை