உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / செய்திகள் சில வரிகளில்/ வடசென்னை

செய்திகள் சில வரிகளில்/ வடசென்னை

கட்டடத் தொழிலாளி மயங்கி விழுந்து பலி புளியந்தோப்பு:வியாசர்பாடி, பி - கல்யாணபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 63; கூலித் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் பெரம்பூர் பழனி முருகன் கோவில் தெருவில் உள்ள பழைய கட்டடத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதுகுறித்து, செம்பியம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ---------------- கஞ்சா வியாபாரி கைது ஓட்டேரி ஸ்ரீபன்சன் சாலையில், கஞ்சா விற்று வந்த, புளியந்தோப்பு நாகாத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹரிகரன், 23 என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 1.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ