உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஏரியில் மூழ்கி முதியவர் பலி

ஏரியில் மூழ்கி முதியவர் பலி

படப்பை, தாம்பரம் அருகே படப்பை அடுத்த மணிமங்கலம், பாரதியார் நகரைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி,70. ஏரியில் மீன் பிடித்து விற்கும் தொழில் செய்து வந்தார்.நேற்று முன்தினம் வீட்டை விட்டுச் சென்றவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், மணிமங்கலம் ஏரியில் கோவிந்தசாமி உடல் மிதப்பதை பார்த்தவர்கள், மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி