மருத்துவமனையில் போக்சோ கைதி பலி
புழல்: 'போக்சோ' வழக்கில் கைது செய்யப்பட்டிருந்தவர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உயிரிழந்தார். கே.கே.நகரைச் சேர்ந்தவர் சீனிவாச ராவ், 57. இவர், 'போக்சோ' வழக்கில் வடபழனி போலீசாரால் கைது செய்யப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் முதல், புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், மன நல சிகிச்சைக்காக கடந்த 17ம் தேதி, கீழ்ப்பாக்கம் அரசு மன நல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், நேற்று உயிரிழந்தார். புழல் போலீசார் விசாரிக்கின்றனர்.