வடசென்னையில் மின் உற்பத்தி நிறுத்தம்
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் மின் வாரியத்திற்கு, வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. அங்கு தலா, 210 மெகா வாட் திறனில், மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. வட சென்னை மின் நிலைய முதல் அலகில் ஆண்டு பராமரிப்பு பணிக்காக, நேற்று அதிகாலை, 2:10 மணி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அங்கு அடுத்த மாதம், 12ம் தேதி, மீண்டும் மின் உற்பத்தி துவக்க திட்டமிடப்பட்டு உள்ளது.