உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கியவர்களுக்கு காப்பு

பிரியாணி கடையில் மாமூல் கேட்டு ஊழியரை தாக்கியவர்களுக்கு காப்பு

கொடுங்கையூர்: கொடுங்கையூர், சீத்தாராமன் நகரைச் சேர்ந்தவர் சையத் நிசார், 37. இவர், கொடுங்கையூர், காமராஜர் சாலை, ஆர்.வி.நகரில், கடந்த ஏழு மாதங்களாக பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு நேற்று மதுபோதையில் வந்த மர்ம நபர்கள் இருவர், மாமூல் கேட்டு தகராறில் ஈடுபட்டனர். பின், பிரியாணி டவரா மூடியை, கடையில் இருந்த ஊழியர் அப்சல், 23, என்பவர் மீது வீசி, அவரை தாக்கி தப்பி சென்றனர். இது குறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட, கொடுங்கையூரைச் சேர்ந்த தனுஷ், 21, கொடுங்கையூர், வெங்கடேஸ்வர நகரைச் சேர்ந்த மோகன செல்வன், 18, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை