மேலும் செய்திகள்
ஓடும் ரயிலில் பெட்டிகள் பிரிந்ததால் பயணியர் பீதி
09-Sep-2024
பொன்னேரி, தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு, நெல் ஏற்றி கொண்டு 42 பெட்டிகளைக் கொண்ட சரக்கு ரயில் வந்து கொண்டிருந்தது.இந்த ரயில், நேற்று மதியம் 2:20 மணியளவில், திருவள்ளூர் மாவட்டம் அனுப்பம்பட்டு - மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு இடையே, சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, ரயிலின் இரண்டு பெட்டிகளுக்கு இடையே இருக்கும் 'கப்ளிங்' எனும் இணைப்பு கொக்கி உடைந்து, இன்ஜினுடன் ஒரு பெட்டி கழன்று ஓடியது. சுதாரித்த ஓட்டுனர், ரயிலை உடனடியாக நிறுத்தி, கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.உடனடியாக, கும்மிடிப்பூண்டி - சென்னை மார்க்கத்தில், மின்சார ரயில்கள் மற்றும் விரைவு ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், ரயில் இன்ஜினை மீஞ்சூர் ரயில் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அங்கு உடைந்த கொக்கியை நீக்கி, புது கொக்கியை ரயில்வே பணியாளர்கள் பொருத்தினர்.மாலை 4:35 மணிக்கு இன்ஜின் பெட்டிகளை இணைத்து, மீண்டும் சரக்கு ரயில் சென்னை புறப்பட்டது.இதனால், கும்மிடிப்பூண்டி- சென்னை சென்ட்ரல் மார்க்கத்தில் இரண்டரை மணி நேரம் விரைவு மற்றும் மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டது.
09-Sep-2024