உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர்

மீனவர்கள் வலையில் ராக்கெட் லாஞ்சர்

சென்னை, காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 24ல் தினேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குள் சென்றனர். கடந்த 5ம் தேதி நிஜாம்பட்டினம் அருகே, 4 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.வலை அதிக பாரமாக இருந்தது. மீனவர்கள் பெரிய மீன் சிக்கியதாக நினைத்து இழுத்ததில், பெரிய இரும்பு பொருள் தெரிந்தது. அதை படகில் ஏற்றிக்கொண்டு, மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். வலையில் சிக்கியது ராக்கெட் லாஞ்சரின் பாகம் எனக் கூறப்படுகிறது. இதை மீன்பிடி துறைமுக உதவி இயக்குனர் செந்தில்குமாரிடம் மீனவர்கள் நேற்று இரவு ஒப்படைத்தனர். மீன்பிடி துறைமுக போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை