உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கஞ்சா விற்ற ரவுடி கைது

 கஞ்சா விற்ற ரவுடி கைது

அயனாவரம்: வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில், கஞ்சா விற்ற ரவுடி கைது செய்யப்பட்டார். அயனாவரம், பச்சைக்கல் வீராசாமி பகுதியில் உள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, நேற்று முன்தினம் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அங்கு பிளாஸ்டிக் பையுடன் நின்ற நபரை பிடித்து விசாரித்தனர். இதில், அயனாவரம் 'சிபி' பிளாக் பகுதியை சேர்ந்த ரவுடி ஹரிஷ்குமார், 28, என்பதும், அவரிடம் விற்பனைக்காக 1.8 கிலோ கஞ்சா இருப்பதும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை