சைபர் வழக்குகளில் ரூ.1.37 கோடி மீட்பு
சென்னை: சென்னையில், அக்டோபர் மாதத்தில் சைபர் கிரைம் குற்றவாளிகளிடம் இருந்து 1.37 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, இழந்தவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையில் அக்டோபர் மாதம் சைபர் கிரைம் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்ட, 109 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 1.37 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் நிலையத்தில், 34 மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, 66.59 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டன. நடப்பாண்டில் இதுவரை, 23.03 கோடி ரூபாய் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் சைபர் கிரைம் போலீசார் ஒப்படைத்துள்ளனர்.