உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கால்வாய்க்கு சுவர் கட்ட ரூ.1.97 கோடி

கால்வாய்க்கு சுவர் கட்ட ரூ.1.97 கோடி

வேளச்சேரி:அடையாறு மண்டலம், 176வது வார்டு, வேளச்சேரி ஏரி மற்றும் ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர், வீராங்கால் கால்வாய் வழியாக பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை அடைகிறது.வேளச்சேரி ஏரியில் இருந்து செல்லும் கால்வாய், இரண்டு ஆண்டுகளுக்கு முன் மூடு கால்வாயாக மாற்றப்பட்டது. ஆதம்பாக்கம் ஏரியில் இருந்து செல்லும் கால்வாய் திறந்த நிலையில் உள்ளது.சேதமடைந்த கால் வாயை உயர்த்தி அமைக்க வேண்டி இருந்தது. நீர்வளத்துறையிடம் இருந்த இந்த கால்வாய், பராமரிப்புக்காக கடந்த மாதம் மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கால்வாய் சுவரை வலுவாக்கி, உயர்த்தி கட்ட முடிவு செய்து, 1.97 கோடி ரூபாயில் மதிப்பீடு தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பணி, பருவமழை முடிந்த பின் துவங்கும் என அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை