இளம்பெண்ணிடம் அத்துமீறல் ஸ்கேன் சென்டர் ஊழியர் கைது
கொளத்துார்: ஸ்கேன் சென்டரில் இளம்பெண்ணிடம் அத்துமீறிய வாலிபர் கைது செய்யப்பட்டார். கொளத்துார் காவல் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண், கர்ப்பப்பை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் ஆலோசனைப்படி, ரெட்டேரியில் உள்ள ஸ்கேன் சென்டருக்கு சென்று, நேற்று முன்தினம் 'ஸ்கேன்' எடுத்துள்ளார். அப்போது அங்கு வேலை செய்யும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜில்கவின், 28, என்பவர், இளம்பெண்ணிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண், ராஜமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரித்த போலீசார், நேற்று முன்தினம் ஜில்கவினை கைது செய்தனர்.