தொழிலாளியிடம் வழிப்பறி
ஆவடி, புது நகரைச் சேர்ந்த கூலி தொழிலாளி திலிப், 17, நேற்று காலை, பெரியார் நகர் சுடுகாடு அருகே நடந்து சென்றார். அவரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 1,000 ரூபாயை வழிப்பறி செய்த ஆவடியைச் சேர்ந்த ஆகாஷ், 20, ஆஷிக், 20 மற்றும் ரஞ்சித்குமார், 20, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர்.