உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  பொங்கலுக்காக ரேஷனில் சிறப்பு தொகுப்பு விற்பனை

 பொங்கலுக்காக ரேஷனில் சிறப்பு தொகுப்பு விற்பனை

சென்னை: பொங்கல் பண்டிகை, வரும் ஜன., 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு ரேஷன் கடைகளில், 225 ரூபாய்க்கு சிறப்பு மளிகை தொகுப்பு விற்கப்படுகிறது. இதில், தலா 500 கிராம் பச்சரிசி, வெல்லம், தலா 50 கிராம் முந்திரி, திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 100 கிராம் பாசி பருப்பு, 50 கிராம் நெய், துணி பை ஆகிய, எட்டு பொருட்கள் உள்ளன. காஞ்சிபுரம் கூட்டுறவு பண்டகசாலை ரேஷன் கடைகளில், 499 ரூபாய்க்கான மளிகை தொகுப்பு விற்கப்படுகிறது. இதில், தலா 500 கிராம் பச்சரிசி, வெல்லம், 200 கிராம் பாசி பருப்பு, தலா, 50 கிராம் முந்திரி, திராட்சை, 10 கிராம் ஏலக்காய், 100 கிராம் ஜவ்வரசி, 170 கிராம் சேமியா உட்பட 18 பொருட்கள் இடம்பெற்றுள்ளன. தவிர, 999 ரூபாய்க்கு சிறுதானியங்கள், மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பும் விற்கப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி