எஸ்.ஆர்.எம்., ஆடவர் அணி பால் பேட்மின்டனில் சாம்பியன்
சென்னை :சென்னை, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லுாரி சார்பில், 'பக்' நினைவு கோப்பைக்கான போட்டிகள், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வி கல்லுாரியில் நடக்கின்றன. ஆடவருக்கான பால் பேட்மின்டன் இறுதி போட்டியில் எஸ்.ஆர்.எம்., அணி, விவேகானந்தர் கல்லுாரி அணியை எதிர்த்து மோதியது. இதில், எஸ்.ஆர்.எம்., அணியின் சிறப்பான ஆட்டத்தால் 35 - 29, 35 - 33 என்ற செட் கணக்கில் வென்றது. ஆறாவது முறையாக, 'சாம்பியன்' பட்டத்தை வென்று அசத்தியுள்ளது.