மேலும் செய்திகள்
தேசிய துடுப்பு போட்டி ராமநாதபுரத்தில் துவக்கம்
04-Oct-2025
சென்னை: மாநில அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி, வேளச்சேரியில் நேற்று துவங்கியுள்ளது. 1,000க்கும் அதிகமான வீரர் - வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு அமெச்சூர் ஜிம்னாஸ்டிக் சங்கம் சார்பில், இருபாலருக்குமான 'மாநில ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் 2025' இரண்டு நாள் போட்டி, வேளச்சேரியில் உள்ள எஸ்.டி.ஏ.டி., உள் விளையாட்டு அரங்கில், நேற்று துவங்கியது. தமிழகத்தின், பல மாவட்டங்களைச் சேர்ந்த 1,000க்கும் அதிகமான வீரர் - வீராங்க னையர் பங்கேற்றனர். ஆறு வயது முதல் 19 வயதுக்குட்பட்டோர் என, ஏழு பிரிவுகளில் போட்டி நடக்கிறது. முதல் நாளில் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட வீரர் - வீராங்கனையருக்கான டேபிள் வால்ட் மற்றும் பேலன்ஸ் பீம் போட்டிகள் நடந்தன. அதேபோல், 10 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் தரை உடற்பயிற்சி, ரிங்க் உட்பட ஆறு வகையான சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.
04-Oct-2025