மேலும் செய்திகள்
மாவட்ட கேரம் 643 பேர் பங்கேற்பு
02-May-2025
சென்னை, தமிழ்நாடு மாநில அமெச்சூர் கிக் பாக்சிங் சங்கம் சார்பில், மாநில அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி, நேற்று முன்தினம் துவங்கியது.போட்டிகள், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அடுத்த மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி பல்கலையில் நடக்கிறது.இதில், சப் - ஜூனியர், ஜூனியர், சீனியர் மற்றும் மாஸ்டர்ஸ் ஆகிய பிரிவுகளில், கிக் லைட், புல் காண்டாக்ட், லோ கிக், கே - 1 ஸ்டைல், இசை வடிவம் உள்ளிட்ட 12 வகையான போட்டிகள் நடக்கின்றன.போட்டியில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 500க்கும் மேற்பட்ட வீரர் - வீராங்கனையர் மோதி வருகின்றனர். போட்டிகள் நாளை வரை நடக்கின்றன. இப்போட்டியில் வெற்றி பெற்று தேர்வாகுவோர், வேலுாரில் நடக்க உள்ள தேசிய கிக் பாக்சிங் பயிற்சி முகாமிற்கு தகுதி பெறுவர் என, போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
02-May-2025