உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆட்டோ மோதி விபத்து மாணவன் பலி

ஆட்டோ மோதி விபத்து மாணவன் பலி

கோயம்பேடு,அரும்பாக்கம், ஜெய் நகர் ரகுராமன் தெருவைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மகன் நவீன்குமார், 18. இவர், மேற்கு மாம்பலத்தில் உள்ள அரசு பள்ளியில், பிளஸ் 2 படித்தார்.நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தவர், பெற்றோரின் பைக்கை எடுத்துக் கொண்டு, பகோடா சாப்பிட, அந்த பகுதியில் உள்ள கடைக்கு சென்றார்.பின், வீட்டிற்கு பைக்கில் திரும்பி வந்தபோது, அரும்பாக்கம், ஜெய் நகர் முதல் தெரு அருகே, எதிரே வந்த லோடு ஆட்டோ, பைக் மீது மோதியதில் நவீன் குமார் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், லோடு ஆட்டோ ஓட்டுநரான, அரும்பாக்கம், ஜெய் நகரைச் சேர்ந்த சரண்ராஜ், 23, என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ