மேலும் செய்திகள்
குட்கா வைத்திருந்த மூதாட்டி கைது
27-Mar-2025
அயனாவரம், அரசால் தடை செய்யப்பட்ட 'இ - சிகரெட்' விற்கப்படுவதாக, அயனாவரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அயனாவரம் பேருந்து நிறுத்தம் அருகே, சந்தேகப்படும்படி நின்றிருந்த நபரை, போலீசார் பிடித்து சோதனை செய்ததில், அவரிடம், ஐந்து 'இ - சிகரெட்' இருந்தது.விசாரணையில், அயனாவரம், யூ.ஐ., நகரைச் சேர்ந்த பிரணவ்குமார், 19, என்பதும், சமூக வலைதளமான 'இன்ஸ்டாகிராம், ஆன்லைன்' வாயிலாக, இ - சிகரெட் விற்பனை செய்பவதும் தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து, 7,500 ரூபாய் மதிப்புள்ள இ சிகரெட்களை பறிமுதல் செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.ஒரு முறை சார்ஜ் செய்தால், பலமுறை பயன்படுத்தப்படும் என்பதால் பர்மா பஜாரில் குறைந்த விலைக்கு அவற்றை வாங்கியுள்ளார்.இ - சிகரெட் சம்பந்தமாக ஆன்லைனில் விளம்பரம் செய்து, 'ஜி பே' செயலி வாயிலாக பணத்தைப் பெற்று, அவர்களின் இடத்திற்கே சென்று விற்பனை செய்துள்ளது, போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
27-Mar-2025