உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாணவி பெயருடன் முதல் தகவல் அறிக்கை வெளியானது சட்டவிரோதம்: அண்ணாமலை

மாணவி பெயருடன் முதல் தகவல் அறிக்கை வெளியானது சட்டவிரோதம்: அண்ணாமலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அண்ணா பல்கலையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட மாணவி பெயர், முகவரி விபரங்களுடன் முதல் தகவல் அறிக்கை வெளியிடப்பட்டது சட்டவிரோதம் என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=u56uy6y1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

அவரது அறிக்கை:

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி, தி.மு.க., நிர்வாகியால், பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்துப் போராட்டம் நடத்தச் சென்ற, முன்னாள் கவர்னர் தமிழிசை, மாநிலத் துணைத் தலைவர் கருநாகராஜன், மாவட்ட தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் சகோதர சகோதரிகளை, வலுக்கட்டாயமாகக் போலீசார் கைது செய்திருக்கின்றனர்.குற்றவாளி தி.மு.க.,வைச் சேர்ந்தவன் என்பதால், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த விவரங்கள் அடங்கிய முதல் தகவல் அறிக்கையை வெளியே கசிய விட்டிருக்கிறார்கள். ஒரு பாலியல் வழக்கில், பாதிக்கப்பட்டவர்கள் குறித்த விவரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படைக் கடமையிலிருந்து தவறியிருக்கிறது தி.மு.க, இது தனிமனித உரிமைகளுக்கு எதிரானது மட்டுமின்றி, சட்டவிரோதச் செயல்பாடும் ஆகும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பு. தி.மு.க.,வைச் சேர்ந்த பாலியல் குற்றவாளியைப் பாதுகாக்க, இத்தனை கீழ்த்தரமான, மனசாட்சியற்ற செயல்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் தி.மு.க., அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் வன்மையாகக் கண்டிக்கிறேன். பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தை மாற்றியிருப்பதற்கு வெட்கப்படுங்கள் ஸ்டாலின். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 53 )

Raj
டிச 27, 2024 16:01

இது போன்ற கொடூரங்கள் நடக்கும் போது கூட கயவர்களைப் பாதுகாக்க ஒரு கூட்டம் போராடுகிறது. இது என்ன அநியாயம்? பெண்களை நிம்மதியாக கல்வி கற்கக் கூட விடாத மாநிலமாக மாறிக் கொண்டிருப்பது வேதனைக்குரியது. ஐயா யார் வீட்டுப் பெண் குழந்தையாக இருந்தால் என்ன அனைவருக்கும் பதைபதைக்க வேண்டாமா? அரசு என்பது வெறும் இயந்திரமா?


அப்பாவி
டிச 27, 2024 06:38

இப்பிடி பேசிப் பேசியே அந்த மாணவியின் பெயரை படி தொடியெல்லாம் பரப்புவீங்க.


sankaranarayanan
டிச 26, 2024 21:04

இப்படித்தான் போதைபொருள் விவகாரத்தில் கைதான சாதிக் பாஷா விஷயம் என்ன ஆயிற்று தண்டனை கொடுத்தாகிவிட்டதா மக்களுக்கு ஓன்றுமே தெரியாது ஏனென்றால் அவன் ஆளும் காட்சியில் முக்கிய பங்காற்றிய அயோக்கியன் அவர்களின் ஆதரவு அதேபோன்றுதான் இப்போது மாணவி கற்பழிப்பிலும் அகப்பட்ட ஞானசேகரன் சைதை கிழக்கு தொகுதி மாணவர் அணி தலைவர் அதனால்தான் அவன் மாணவியைத்தேடி அண்ணா கல்லூரி விளாகம் சென்றுள்ளான் அவனுக்குப்பின்னால் வருங்கால முதவரின் முழு ஆதரவு இருக்கும் என்றே நன்கு தெரிந்ததான் இந்த நீசகநடவடிக்கியில் அவன் இறங்கியுள்ளன் முடிவில் பொறுத்திருந்து பாருங்களேன் பிசுபிசுத்து போய் ஒன்றுமே இல்லை என்றாகிவிடும் காலம்தான் வெல்லும்


viswanathan sundaram Panchapakesan
டிச 27, 2024 16:49

TRUE


krishna
டிச 26, 2024 20:15

ENGE ENGE FRUIT AKKA.OOH MANIPUR UP ANGU ULLAVARGAL MATTUME PENGAL.KEVALAM. IPPO CANDLE LIGHT MARCH DRAVIDA MODEL MAGALIR ANI NADATHUMAA.KEVALAMAANA JENMAM.


Sudha
டிச 26, 2024 18:21

வேளாண் இயங்காரை காணோம், ஒருவேளை இதெல்லாம் சகஜமப்பா டைப் போல் இருக்கும்


ponssasi
டிச 26, 2024 18:10

பிஜேபி எதிர்கட்சி என கட்ட அண்ணாமலை முயல்கிறார் என ஒரு தரங்கட்ட அறிக்கையை திருமா விட்டிருக்கிறார். திருமா எதை விருப்புகிறார் தன்னைப் போல திராவிட அடிமையாக அனைவரும் இருக்கவேண்டும் என விருப்புகிறார் போலும். அம்பேத்கார் இதைத்தான் உங்களுக்கு விட்டுசென்றாரா திருமா? அநியாயம் நடக்கும்போது பொங்கி எழவேண்டாமா? FIR காப்பிய வெளியிட்டதற்கு பொறுப்பு அமைச்சர் பதவி விலக வற்புறுத்தவேண்டாமா? தவறை சுட்டிகாட்டுபவரை இழிவு படுத்தாதீர்கள் அது உங்களை இழிவானவராக காட்டிவிடும். இன்னும் நேரம் இருக்கிறது அதற்குள் குற்றவாளி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சார்ந்தவனா என பார்த்து கை கால் ஒடிந்ததற்கு இழப்பீடும் அவன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க கோரி வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேளுங்கள்.


sankaranarayanan
டிச 26, 2024 17:36

உயர் நீதி மன்றங்கள் உச்ச நீதி மன்றம் இவைகள் இன்னுமா பேசாமல் இருக்கின்றன ஆட்சி இன்னுமா நீடிக்கிறது இதைவிட இன்னம் மக்களுக்கு என்ன வாழ்க்கையில் வேண்டும்


சுந்தரம் விஸ்வநாதன்
டிச 26, 2024 17:16

தமிழில் சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலிலேயே விழலாம் என்று ஒரு சொலவடை உண்டு. அதுபோல குற்றவாளியான உடன் பிறப்பு பெண்ணின் புகைப்படத்தையும் வீடியோவையும் பெண்ணின் வீட்டுக்கு அனுப்புவேன் என்றுதான் பிளாக் மெயில் செய்தான். ஆனால் கழக காவல் துறையோ பெண்ணின் புகைப்படம் மற்றும் முகவரியை நாட்டுக்கே தெரியப்படுத்தி மிரட்டுகிறது நாளைக்கே பாதிக்கப்பட்ட பெண் வந்து பத்திரிக்கைகளில் வெளியானது மாதிரி சம்பவமே நடக்கவில்லை என்று அறிக்கை கொடுத்ததாக அரசு பத்திரிக்கை குறிப்பு வெளியிடும். இப்படிப்பட்ட அரசின் கீழ் குடிமகன்களாக இருக்க வெட்கப்பட வேண்டும்.


vijay
டிச 26, 2024 17:09

வேதனையிலும் வேதனை பாதிக்க பட்ட பெண்ணின் விவரங்களை அதிலும் போலீஸ்ன் வெப் சைட்டில் முதல் தகவல் அறிக்கையை வெளியிட்டது. இது சுப்ரீ கோர்ட்டின் விதிமுறைகளுக்கு முரணானது . இந்த விவரங்களை வெளியிட்ட யாராக இருந்தாலும் அவரகள் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்படுத்த வேண்டும் .


venugopal s
டிச 26, 2024 17:01

நீங்கள் தான் மாஜி போலீஸ் ஆச்சே, தவறு செய்த அரசுக்கு எதிராக வழக்கு தொடுக்க வேண்டியது தானே! வெறும் வாய்ச் சவடால் பேச்சு எதற்கு?


Raj S
டிச 26, 2024 23:40

உங்க வீட்ல பெண் குழந்தைகள் இல்ல போல... இருந்தா அவங்க நிலைமை பாவம்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை