உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடைக்காரரை தாக்கி பணம் பறித்தோர் கைது

கடைக்காரரை தாக்கி பணம் பறித்தோர் கைது

வியாசர்பாடி பெரம்பூர், குமாரசாமி தெருவைச் சேர்ந்தவர் அப்துல் காதர், 34. இவர், வியாசர்பாடி ரயில் நிலைய நடைபாதையில் பொம்மை கடை நடத்தி வருகிறார்.நேற்று வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த நால்வர் கும்பல் அப்துல் காதரிடம் 'ஏன் நடைபாதையில் கடை வைத்துள்ளாய்?' எனக் கேட்டு தகராறில் ஈடுபட்டு பணம் கேட்டுள்ளனர்.அவர் தரமறுக்கவே, அடித்து அவரிடமிருந்த 2,500 ரூபாயை பறித்து சென்றனர்.இது குறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து கார்த்திக், 25, நந்தகுமார், 19, ஆகியோரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவானோரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ