கஞ்சா சாக்ேலட் விற்பனை பெண் உட்பட மூவர் கைது
சென்னை,புதுப்பேட்டை தெற்கு கூவம் சாலையில் நின்ற பெண் உட்பட மூவரை எழும்பூர் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரண்பாடாக பதில் அளித்ததால், சந்தேகமடைந்த போலீசார், அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், 41 கஞ்சா சாக்லேட் சிக்கியது. விசாரணையில், புரசைவாக்கத்தை சேர்ந்த உஷா, 42, கோகுலகிருஷ்ணன், 19, பாலாஜி, 20, என்பது தெரிய வந்தது.நேற்று மூவரையும் கைது செய்த போலீசார், 41 கஞ்சா சாக்லேட், 2.950 கிலோ கஞ்சா, மூன்று மொபைல் போன்கள், 60,000 ரூபாய், ஒரு இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட உஷா, பிரபல கஞ்சா வியாபாரி வேல் அழகி என்பவருடைய மகள்.