உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மீன் அங்காடியால் போக்குவரத்து நெரிசல் அருணாச்சலம் சாலையில் தினசரி அவதி

மீன் அங்காடியால் போக்குவரத்து நெரிசல் அருணாச்சலம் சாலையில் தினசரி அவதி

சிந்தாதிரிபேட்டை, சிந்தாதிரிப்பேட்டை அருணாச்சலம் சாலையில், பழமையான மீன் அங்காடி உள்ளது. இங்கு சுற்று வட்டாரப்பகுதியில் இருந்து தினசரி நுாற்றுக்கணக்கானோர் மீன்களை வாங்கிச் செல்கின்றனர். மீன் அங்காடிக்கு அருகில் உள்ள தெருக்களிலும் மீன் கடைகள் அதிகரித்துள்ளன. இங்கு மீன்கள் வாங்க வருவோருக்கு வாகனங்கள் நிறுத்துவதற்கென இடம் ஏதும் ஒதுக்கப்படாததால், சாலையை ஆக்கிரமித்தே அவற்றை நிறுத்திச் செல்கின்றனர். இதனால் தினசரி பீக் ஹவர்ஸ் நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது:மேற்கு கூவம் சாலை பூங்கா ரயில் நிலையம் அருகே, 2.19 கோடி ரூபாய் செலவில், 1,022 ச.மீ., பரப்பளவில், 102 கடைகளுடன் நவீன மீன் அங்காடி கட்டுமான பணியை, கடந்த ஆண்டு ஜூலை, 10ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.தற்போது கட்டுமான பணிகள் முடிவடைந்தும், மீன் அங்காடி திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நவீன மீன் அங்காடி திறக்கப்பட்டால் மட்டுமே, அருணாச்சலம் சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து கேட்ட போது, போக்குவரத்து போலீசார் கூறியதாவது:அருணாச்சலம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்பதற்காக, எழும்பூரிலிருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு வரும் வாகனங்களை மேற்கு கூவம் சாலை வழியாக திருப்பி, போக்குவரத்து மாற்றத்தை அமல்படுத்தினோம்.ஆனால், வாகன ஓட்டிகள் மேற்கு கூவம் சாலையில் நுழைந்து, அருணாச்சலம் சாலையை இணைக்கும் தெருக்கள் வழியாக சென்று வருகின்றனர். இதன் காரணமாகவே நெரிசல் ஏற்படுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை