உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

ரயிலில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

சென்னை, விரைவு ரயிலில் சென்னை சென்ட்ரலுக்கு கடத்தி வந்த, 13 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், கடத்தலில் ஈடுபட்ட இருவரை கைது செய்தனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தின், ஐந்தாவது நடைமேடைக்கு, ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து ஒரு விரைவு ரயில் வந்தது.அதில் வந்த சிவகங்கை மாவட்டம், நேரு பஜாரைச் சேர்ந்த விஷ்ணுவர்தன், 23, சிவகங்கை திருப்புவனத்தைச் சேர்ந்த ஹைம்நாத்பாபு, 22, ஆகியோரை பிடித்தனர். அவர்களின் பைகளை சோதித்தபோது, 13 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. இவற்றின் மதிப்பு 2.30 லட்சம் ரூபாய்.ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கஞ்சா பொட்டலங்களை வாங்கி, ரயிலில் கொண்டு வந்து, பின் மதுரைக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்த போலீசார், இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை