உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கள்ளக்காதலியின் கணவனை வெட்டிக்கொன்ற வாலிபர் சரண்

கள்ளக்காதலியின் கணவனை வெட்டிக்கொன்ற வாலிபர் சரண்

நன்மங்கலம், கள்ளக்காதலியின் கணவனை வெட்டிக் கொன்ற வாலிபர், போலீசில் சரணடைந்தார். வேளச்சேரி அடுத்த நன்மங்கலம், ராமகிருஷ்ணன் பெருமாள் நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரன், 42; மரக்கடை உரிமையாளர். இவர், தன் மாமா மகள் பராசக்தியை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு, இரண்டு பெண், ஒரு ஆண் குழந்தைகள் உள்ளன. பராசக்திக்கும் சேலையூர் காமராஜபுரத்தைச் சேர்ந்த சுதாகர் ராஜ், 38, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கணவர், குழந்தைகளை பிரிந்த பராசக்தி, கடந்தாண்டு டிசம்பர் கள்ளக்காதலனுடன் சென்றுள்ளார். கடந்த மாதம், கணவன் வீட்டிற்கு திரும்பி உள்ளார். இதற்கிடையே, நேற்று முன்தினம் பராசக்தியின் வீட்டிற்கு சுதாகர் ராஜ் வந்துள்ளார். அப்போது மகேஸ்வரன், அவரை எச்சரித்து அனுப்பி உள்ளார். நேற்று மாலை மீண்டும் பராசக்தியின் வீட்டிற்கு வந்த சுதாகர் ராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மகேஸ்வரனின் கழுத்தில் வெட்டினார். இதில் சம்பவ இடத்திலேயே, ரத்த வெள்ளத்தில் மகேஸ்வரன் உயிரிழந்தார். இதையடுத்து, சுதாகர் ராஜ் அங்கிருந்து, தான் வந்த காரிலேயே தப்பி சென்றார். மேடவாக்கம் போலீசார், மகேஸ்வரனின் உடலை, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், சேலையூர் காவல் நிலையத்தில் சுதாகர் ராஜ் சரணடைந்தார். சேலையூர் போலீசார் அவரை, மேடவாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவரிடம் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை