உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.44 கோடிக்கு விற்பனை

உழவர் சந்தையில் கடந்த மாதம் ரூ.1.44 கோடிக்கு விற்பனை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி உழவர் சந்தையில் கடந்த மாதம், ஒரு கோடியே, 44 லட்சத்துக்கு, 9 ஆயிரத்து, 330 ரூபாய்க்கு காய்கறிகள் விற்பனையாகியுள்ளன.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, உழவர் சந்தை செயல்படுகிறது. விவசாயிகள் காய்கறிகளை நேரிடையாக சந்தைப்படுத்தும் வகையில், உழவர் சந்தை செயல்படுகிறது. இங்கு மொத்தம், 80 கடைகள் உள்ளன.பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, சுல்தான் பேட்டை, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதியில் அடையாள அட்டை பெற்றுள்ள, 300க்கும் மேற்பட்ட விவசாயிகள், உழவர் சந்தையில் காய்கறி விற்பனை செய்கின்றனர்.காய்கறிகள் தரமாகவும், விலை மலிவாகவும்; விவசாயிகள் நேரிடையாக விற்பனை செய்வதால், சந்தையில் காய்கறி வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.உழவர் சந்தை அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த மாதம் நாளொன்றுக்கு, 4 லட்சத்து, 64 ஆயிரத்து, 817 ரூபாய் மதிப்புள்ள, 13,749.35 கிலோ காய்கறிகள் வந்தன. ஒரு நாளுக்கு, 58 விவசாயிகளும், 2,747 நுகர்வோர்கள் பயன்பெற்றுள்ளனர்.கடந்த மாதம் மொத்தம், 426.2 மெட்ரிக் டன் காய்கறி வரத்து இருந்தது. இவைகளின் மொத்த விற்பனை மதிப்பு, ஒரு கோடியே, 44 லட்சத்து, 9 ஆயிரத்து, 330 ரூபாயாகும். மொத்தம், 1,816 விவசாயிகள், 85,172 நுகர்வோர்கள் பயன்பெற்றனர்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை