உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறையில் 2 கிராம் கஞ்சா பறிமுதல் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

சிறையில் 2 கிராம் கஞ்சா பறிமுதல் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை

கோவை:கோவை மத்திய சிறைவாசியிடம், 2 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கோவை மத்திய சிறையில் சரவணப்பாண்டி, பிரவீன்குமார் ஆகியோர் தண்டனை அனுபவித்து வருகின்றனர். சிறை அதிகாரிகள் மொபைல்போன் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து, திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது சரவணப்பாண்டி, அதிகாரிகளை சோதனை செய்யவிடாமல், தடுத்து வாக்குவாதம் செய்துள்ளார். அறையில் சோதனையிட்டபோது, 2 கிராம் கஞ்சா இருந்துள்ளது.பிரவீன்குமார் கடந்த, 1ம் தேதி கோர்ட் சென்று திரும்பியபோது, கஞ்சாவை மறைத்து கொண்டுவந்து, சரவணப்பாண்டியிடம் கொடுத்தது தெரியவந்தது. ஜெயிலர் சரவணக்குமார் அளித்த புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை