உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பூட்டிய வீட்டில் பகலில் 43 சவரன் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் பகலில் 43 சவரன் நகை திருட்டு

கோவை:கோவை சேரன்மாநகரில் வீட்டின் பூட்டை உடைந்து, 43 சவரன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் பணம் திருடிய நபரை, போலீசார் தேடுகின்றனர்.கோவை, சேரன்மாநகரைச் சேர்ந்தவர் மோனிஸ் ராஜன், 27. இவர் தன் தாயுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். திருவண்ணாமலையில் பிளாஸ்டிக் தயாரிப்பு கம்பெனி வைத்துள்ளார்.கடந்த, 3ம் தேதி காலை 10:00 மணிக்கு இவர் தனது தாயுடன், வீட்டை பூட்டிவிட்டு தாராபுரத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். மாலை 6:00 மணிக்கு வீடு திரும்பினார். வீட்டின் முன்பக்க கேட் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.படுக்கை அறை அலமாரியில் இருந்த, 43 சவரன் நகை மற்றும் 1.5 லட்சம் ரூபாய் ரொக்கம் திருட்டு போயிருந்ன. மோனிஸ் ராஜன் அளித்த புகாரின்படி, பீளமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ