உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வெயிலால் வாழை வரத்து சரிவு: சில ரகங்களின் விலை உயர்வு

வெயிலால் வாழை வரத்து சரிவு: சில ரகங்களின் விலை உயர்வு

கிணத்துக்கடவு;கிணத்துக்கடவு மார்க்கெட்டில் வாழை வரத்து குறைந்த நிலையில், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய, மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். இங்கு விளை பொருட்கள் உடனுக்குடன் விற்பனையாவதால், விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.கிணத்துக்கடவு மார்க்கெட்டில் தற்போது வாழை வரத்து குறைந்த நிலையில், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது, என, வியாபாரிகள் தெரிவித்தனர்.இந்த வாரம், செவ்வாழை - 55 (கிலோ), பூவன் - 30, ரஸ்தாளி - 30, கதளி - 28, சாம்பிராணி - 25 ரூபாய்க்கு விற்பனை ஆனது. கடந்த, 10 நாட்களுக்கு முன் இருந்த விலையை விட செவ்வாழை, பூவன் கிலோவுக்கு, 5 ரூபாய், கதளிக்கு, 3 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.இதுகுறித்து, விவசாயிகள் கூறுகையில், 'கோடை தாக்கத்தால் வரத்து குறைந்துள்ளது. மேலும், ஒரு சில வாழை ரகங்களின் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கோடை மழை கைகொடுக்கும் பட்சத்தில், வாழை வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளது, என, விவசாயிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ