உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / விவசாய செய்தி தக்காளி வரத்து அதிகரித்தது விலையில் ஏற்பட்டது மாற்றம்

விவசாய செய்தி தக்காளி வரத்து அதிகரித்தது விலையில் ஏற்பட்டது மாற்றம்

கிணத்துக்கடவு, ஜூலை 8--

கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் தக்காளி வரத்து அதிகரித்து, விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.காய்கள் விலை நிலவரம் குறித்து, வியாபாரிகள் கூறியதாவது,கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், நேற்று தக்காளி பெட்டி (15 கிலோ) 500, தேங்காய் 16 (ஒன்று), கத்தரிக்காய் (கிலோ) - 62 , முருங்கைகாய் - 120, வெண்டைக்காய் - , முள்ளங்கி - 32, வெள்ளரிக்காய் - 15, பூசணிக்காய் - 15, அரசாணிக்காய் - 15, பாகற்காய் -55, புடலை - 30, சுரைக்காய் - 23, பீக்கங்காய் - 60, பீட்ரூட் - 55, அவரைக்காய் - 125, பச்சை மிளகாய் - 135 ரூபாய்க்கு விற்கப்பட்டது.கடந்த வாரத்தை விட, தற்போது காய்களின் விலை மாறுபட்டுள்ளது. இதில், தேங்காய் (ஒன்று) - 3 ரூபாய், முருங்கைக்காய் (கிலோ) - 10, புடலை மற்றும் பீட்ரூட் - 5, பச்சை மிளகாய் - 25, அவரைக்காய் - 30 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. வெண்டைக்காய் - 15, பீங்கன்காய் - 10 ரூபாய் விலை சரிந்துள்ளது.இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், 'கடந்த வாரத்தில் இருந்த தக்காளி வரவை விட தற்போது இருமடங்கு அதிகரித்துள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ