உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆடி பெருக்கு, அமாவாசை சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆடி பெருக்கு, அமாவாசை சிறப்பு பஸ்கள் இயக்கம்

ஆடி பெருக்கு, ஆடி அமாவாசையை முன்னிட்டு, திருப்பூரில் இருந்து திருச்செந்துார், ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பஸ் இயக்கப்பட உள்ளது.இன்று ஆடி பெருக்கு, நாளை ஆடி அமாவாசை. இரு தினங்களிலும், கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பக்தர் வசதிக்காக காங்கயம் மற்றும் தாராபுரத்தில் இருந்து, பத்து பஸ்கள் கொடுமுடிக்கு இயக்கப்படும்.திருப்பூரில் ராமேஸ்வரம், திருச்செந்துாருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.வழக்கமாக இயங்கும் பஸ்களில் முன்பதிவு முடிந்து விட்டதால், சிறப்பு பஸ்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை இயக்கப்படும் என, திருப்பூர் மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி