உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவுக்கு சங்கருக்கு   ஜாமின்?வரும் 11ல் உத்தரவு 

சவுக்கு சங்கருக்கு   ஜாமின்?வரும் 11ல் உத்தரவு 

கோவை;சவுக்கு சங்கர் ஜாமின் மனு மீதான உத்தரவு, வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.'சவுக்கு மீடியா' என்ற யு டியூப் சேனல் நடத்தி வரும், சென்னையை சேர்ந்த சங்கர், 'ரெட்பிக்ஸ்' என்ற யு யூடிப் சேனலுக்கு பேட்டி அளித்த போது, பெண் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக, கோவை சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். ரெட்பீக்ஸ் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டும் கைதானார். ஜாமினில் விடுவிக்க கோரி, கோவை, ஜே.எம்:4, கோர்ட்டில் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு மீது உத்தரவு பிறப்பிக்க நேற்று வாய்தா போடப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜாமின் மனு மீதான உத்தரவு, வரும் 11க்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. பேட்டியை வெளியிட்ட யு டியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு, ஜாமின் மனு ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்