உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சூலக்கல் மாரியம்மன் கோவிலில் வரும் 13ல் தேர் திருவிழா துவக்கம்

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் வரும் 13ல் தேர் திருவிழா துவக்கம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், வரும், 13ம் தேதி தேர் திருவிழா துவங்குகிறது.பொள்ளாச்சி அருகே, சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டு திருவிழா, வரும், 13ம் தேதி காலை, 9:30 மணிக்கு திருத்தேர் முகூர்த்தக்கால் நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.வரும், 14ல், காலை, 9:00 மணிக்கு வேல் புறப்பாடு, இரவு, 9:00 மணிக்கு பூச்சாட்டு விழா நடக்கிறது.20ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கிராமசாந்தி, வாஸ்து சாந்தியும், 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு கம்பம் நாட்டு விழா, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 22ம் தேதி காலை,9:00 மணிக்கு கொடியேற்றம், இரவு, அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.23ம் தேதி முதல், 28ம் தேதி வரை தினமும் காலை, 9:00 மணி மற்றும் இரவு, 8:00 மணிக்கு அம்மன் திருவீதி உலா; இரவு, 9:00 மணிக்கு பூவோடு எடுத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.வரும், 29ம் தேதி காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைத்தல், இரவு, 7:00 மணிக்கு அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.30ம் தேதி மாலை, 4:30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 31ம் தேதி மாலை, இரண்டாம் நாள் தேர் வடம் பிடித்தல், ஜூன் 1ம் தேதி மாலை, மூன்றாம் நாள் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 2ம் தேதி மதியம், 12:00 மணிக்கு மஹா அபிேஷகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை