உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

பொள்ளாச்சி;அங்கலக்குறிச்சி, நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (21ம் தேதி) நடக்கிறது.பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சி கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (21ம் தேதி) காலை 11:00 மணிக்கு நடக்கிறது. உடுமலை மேற்பார்வை பொறியாளர் தலைமையில், அங்கலக்குறிச்சி கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது.எனவே, அங்கலக்குறிச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, அங்கலக்குறிச்சி செயற்பொறியாளர், தேவானந்த் தெரிவித்தார்.* நெகமம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (21ம் தேதி) காலை, 11:00 மணிக்கு நடக்கிறது. கூட்டமானது, மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியன் தலைமையில், நெகமம் கோட்ட அலுவலகத்தில் நடக்கிறது. நெகமம் கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் கூட்டத்தில் கலந்து கொண்டு, தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இத்தகவலை, நெகமம், செயற்பொறியாளர், சங்கர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ