நரம்பியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கு தேவையான பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பது தொடர்பான இலவச ஆலோசனை முகாம், கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள, கே.எம்.சி.எச்.,ல்நடக்கிறது.கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறியதாவது:மருத்துவமனையில் உள்ள குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ பிரிவில், இருதயம், நரம்பு, எலும்பு, உளவியல், வயிறு, சிறுநீரகம் தொடர்பான அனைத்து பாதிப்புக்கும், அதிநவீன சிகிச்சை அளிக்கப்படுகிறது. நரம்பியல் பாதிப்புக்குள்ளான குழந்தைகளுக்கான இலவச ஆலோசனை முகாம், வரும் 31ம் தேதி வரை, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில், தினமும் காலை, 9:00 முதல் பிற்பகல், 3:00 மணி வரை நடக்கிறது. சம்பந்தப்பட்ட துறை சார்ந்த மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர்.மனரீதியாக அல்லது உடல் ரீதியாக குழந்தையின் வளர்ச்சி தாமதம், வலிப்பு நோய், தலைவலி, பக்கவாதம், தசைநார் சிதைவு நோய், பேச்சில் தாமதம், ஆட்டிசம், கவனக்குறைவு, உயர் செயல்திறன் குறைபாடு, மூளை நரம்பியல் சார்ந்த பிறவிக்குறைபாடுகள், பெருமூளை வாதம் போன்ற நரம்பியல் சம்பந்தப்பட்ட பாதிப்புகளுக்கு உரிய பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிப்பது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.மேலும், சுவாசிப்பதில் சிரமம், தோல் நீல நிறமாக மாறுவது, விளையாடும்போது சோர்வு ஏற்படுவது உள்ளிட்ட இருதயம் சார்ந்த பாதிப்புள்ள குழந்தைகள்; மன அழுத்தம், மனச்சோர்வு, துாக்கமின்மை, வீடியோகேம், மொபைல்போன், இன்டர்நெட் பயன்பாட்டுக்கு அடிமையாகுதல் உள்ளிட்ட மனநலம் சார்ந்த பாதிப்புள்ள குழந்தைகளும் இம்முகாமில் பங்கேற்கலாம்.இலவச மருத்துவ ஆலோசனையுடன், பரிசோதனை மற்றும் சிகிச்சையை சலுகை கட்டணத்தில் பெறலாம். மேலும் விவரங்களுக்கு, 73393 33485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.