உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவிந்தாபுரம் ரயில்வே கேட் இரண்டு நாட்கள் மூடல்

கோவிந்தாபுரம் ரயில்வே கேட் இரண்டு நாட்கள் மூடல்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, பராமரிப்பு பணிக்காக ரயில்வே கேட் நாளை மூடப்படுகிறது.பொள்ளாச்சி -அருகே, மீனாட்சிபுரம் ரயில் பாதையில், பொள்ளாச்சி - கோவிந்தாபுரம் ரயில்வேகேட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக, நாளை, 26ம் தேதி காலை, 6:00 மணி முதல் வரும், 27ம் தேதி இரவு, 7:00 மணி வரை மூடப்படுகிறது.இதற்கு மாற்றாக, கோவிந்தாபுரம் - பெரியபோது வழித்தடத்தை பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ