வெளியூர் வரத்து அதிகரிப்பு; வாழைத்தார் விலையில் மாற்றம்
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில் இந்த வாரம் வாழைத்தார் வெளியூர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.கிணத்துக்கடவு, தினசரி மார்க்கெட்டில் விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்கின்றனர். இந்த வாரம், செவ்வாழை கிலோ - 75 முதல் 80 ரூபாய் வரை விற்றது. நேந்திரன், 35 - 40; ரஸ்தாளி - 50, பூவன் - 38, கதளி - 50, சாம்பிராணி - 45 ரூபாய்க்கு விற்பனை ஆனது.கடந்த வாரத்தை விட, செவ்வாழை கிலோ - 20, ரஸ்தாளி - 10, கதளி மற்றும் சாம்பிராணி - 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது. நேந்திரன் - 10 மற்றும் பூவன் - 2 ரூபாய் விலை சரிந்துள்ளது.வியாபாரிகள் கூறுகையில், 'இந்த வாரம், உள்ளூர் வரத்து குறைவாகவே இருந்தது. பூவன் வகை வாழைத்தார் அதிகளவு வெளியூர் வரத்து இருந்தது. விலையில் அதிகளவு மாற்றம் ஏற்பட்டுள்ளது,' என்றனர்.