உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்; நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை

பொள்ளாச்சி : கோர்ட் உத்தரவுப்படி, பொள்ளாச்சியில் சாலையோர தற்காலிக ஆக்கிரமிப்புகளை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நேற்று அகற்றினர்.பொள்ளாச்சியில் சாலையோரங்களை ஆக்கிரமித்து கடைகள் அமைக்கப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, தனி நபர் ஒருவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.உயர்நீதிமன்ற உத்தரவின்படி, ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்ள வேண்டுமென, நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலையோர கடைக்காரர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்நிலையில், நேற்று பொள்ளாச்சி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி - பாலக்காடு ரோடு தபால் அலுவலகம் முதல் ஆக்கிரமிப்பு அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், நகராட்சி ஊழியர்கள், போலீசார், வருவாய்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர்.நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி, பொள்ளாச்சி தபால் அலுவலகம் முதல், பாலக்காடு ரோடு தனியார் பள்ளி வரையிலும், மீன்கரை ரோட்டில், திருவள்ளுவர் திடல் மற்றும் மார்க்கெட் ரோடு சந்திப்பு ஆகிய பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.வால்பாறை ரோட்டில், நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதல் மோதிராபுரம் பிரிவு வரை உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. மறுபடியும் ஆக்கிரமிப்பு ஏற்படாத வகையில் தொடர்ந்து, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை